Friday 3rd of May 2024 11:18:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட முன்பு கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும்!

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட முன்பு கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும்!


கொரோனா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த வைரஸ் தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும் கல்வியாளருமான கரோல் சிகோரா தெரிவித்துள்ளார்.

பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்குஅதிகமாகவே நோய் எதிர்ப்புசக்தி உள்ளதாக கருதுகிறேன். இந்நிலையில் கொரோனா தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தினாலே அந்த வைரஸ் படிப்படியாக தானாகவே அழிந்துவிடும் என தனது 'ருவிட்டர்' பதிவில் கரோல் சிகோரா கருத்து வெளியிட்டுள்ளாா்.

எதுவுமே கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் சாத்தியம் உள்ளது என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவா் கூறியுள்ளாா்.

எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே நோய்த் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE